திருவள்ளூரில் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video

திருவள்ளூரில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களை கடும் வெயில் வாட்டி வதைத்துவந்தது. இந்நிலையில் இன்று (ஆக.18) திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணவாளநகர், திருப்பாச்சூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சோழவரம், காக்கலூர், மணவள நகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.