'18 நாளில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது'- நெகிழ்ச்சியில் பாரம் படக்குழு

By

Published : Feb 18, 2020, 8:27 PM IST

thumbnail
பெண் இயக்குநர் கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பாரம்'. வயதான பெற்றோரை கவனிக்காமல், தலைகூத்தல் என்னும் முறை இன்னும் கிராமங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 2018ஆம் ஆண்டு முடிந்த நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இருப்பினும் இயக்குநர் ராம் உதவியால் பாரம் படம் பல விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. இப்படம் தேசிய விருது உள்பட பல விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. தற்போது ஒரு வழியாக 'பாரம்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இப்படம் குறித்து படத்தில் பணியாற்றியவர்கள், 'பாரம்' குறித்து பேசியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.