கொடிவேரி அணையில் பரிசல் இயக்க தடை!
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Oct 15, 2023, 12:18 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15-10-2023/640-480-19771506-thumbnail-16x9-dam.jpg)
ஈரோடு: நேற்று பெய்த கனமழையால் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கட்டு வழியாக 1,120 கன அடி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அணைக்கு வரவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றானது, கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயனிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் அணைக்கு வரும் உபரி நீரானது பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணை வழியாக 1,120 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணை வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கொடிவேரி அணைக்கட்டுக்கு வரவும், பரிசல் பயனம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.