thumbnail

Panguni Uthiram: பழனி முருகன் கோயிலில் களைகட்டிய பங்குனி உத்திர தேரோட்டம்!

By

Published : Apr 5, 2023, 8:22 AM IST

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கடந்த 29 ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும், மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் முத்தரித்து பாதயாத்திரையாக வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது‌. அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற பங்குனி தேரோட்டத் திருவிழா நேற்று மாலை விமர்சையாக நடைபெற்றது. பழனி அடிவாரம் கிரிவீதியில் நின்ற தேரில் அருள்மிகு முகத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை சமேதராக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு முகத்துக்குமாரசாமி - வள்ளி - தெய்வானை சமேதராக எழுந்தருளி நான்குகிரி வீதிகளிலும் தேர்ப்பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டு மகிழ்ந்தனர். தேரோட்டத்தில் பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வருகிற 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.