திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றம்! - Ayya Vaigunder Avatar

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 21, 2023, 4:33 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா இன்று (ஜூலை 21) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற ஜூலை 31 ஆம் தேதி வரை 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு அவதாரபதியில் காலை 5 மணிக்கு உகப்படிப்பும், பணிவிடையும் நடந்தது. 

இதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் அவதாரபதியை ஒரு முறையும், கொடி மரத்தை ஐந்து முறையும் சுற்றி வலம் வந்தது. அதன் பின்னர் கொடியேற்றப்பட்டது. மேலும், புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். 11ஆம் திருநாளான  ஆகஸ்ட் 1 ஆம் தேதி தேரோட்டம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.