thumbnail

ஆண்டிப்பட்டி போலீஸ் குடியிருப்பில் முதலமைச்சர் திடீர் ஆய்வு: தோசை சாப்பிட அழைத்த பெண்.. முதலில் தண்ணீர் தாங்க என கேட்ட ஸ்டாலின்..

By

Published : Apr 30, 2022, 9:52 AM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

தேனி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டிப்பட்டி நகருக்கு வந்த போது திடீரென போலீஸ் குடியிருப்புக்குள் சென்றார். வாகனத்தை விட்டு இறங்கி சென்ற ஸ்டாலின், குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றார். முதலமைச்சர் வீட்டிற்குள் வந்ததைக் கண்ட குடியிருப்பு வாசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் முதலமைச்சரை சாப்பிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு வீட்டில் இரவு என்ன சாப்பாடு என்று ஸ்டாலின் கேட்ட போது, தோசை என்று அந்த பெண் கூறினார். எனக்கு முதலில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்ட ஸ்டாலின், தண்ணீரை குடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றார். அந்த குடியிருப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அந்த குடியிருப்பு நுழைவாயிலில் பதிக்கப்பட்டு இருந்த கல்வெட்டை பார்வையிட்டு அதன்பின்னர் வாகனத்தில் ஏறி வைகை அணைக்கு புறப்பட்டு சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.