கோயில் பூட்டை உடைத்து முருகனின் வேல் திருட்டு..! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..! - today latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-09-2023/640-480-19616857-thumbnail-16x9-ttcctv.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Sep 27, 2023, 8:22 AM IST
திருவண்ணாமலை: செங்கம் அருகே இரண்டு மர்ம நபர்கள் குன்று மேடு முருகன் கோயிலின் பூட்டை உடைத்து, கோயிலில் இருந்த முருகனின் வேல் மற்றும் குத்து விளக்குகளைத் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை ஊராட்சியில் உள்ள குன்று மேட்டில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணியன் ஆலயத்தில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் பூட்டை உடைத்து முருகன் சிலையில் இருந்த வேல் மற்றும் 35 கிலோ எடை கொண்ட இரண்டு பித்தளை குத்து விளக்குகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த செங்கம் போலீசார் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் செங்கம் பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்த நிலையில், கோயில் பூட்டை உடைத்து நடைபெற்ற திருட்டு சம்பவத்தின் சிசிடி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.