Bike theft: பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு.. சிசிடிவி காட்சி வைரல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 2:23 PM IST

thumbnail

திண்டுக்கல்: பழனியில் துணிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடை மேலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் இருந்து, ரயில் நிலைய சாலையான ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது “பீட்டர் இங்கிலாந்து” என்கிற துணிக்கடை. இந்த கடையின் மேலாளராக பணியாற்றி வருபவர் கோட்டைமேட்டைச் சேர்ந்த அப்துல் சமது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை, பொதுமக்கள் வரத்து இன்றி சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், அப்துல் சமது தனது கடையின் முன்பு, இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் நிறுத்தி உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு, பின்னர் வாகனத்தை எடுத்து சென்று உள்ளார். 

இந்நிலையில், இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த மேலாளர், வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத்தொடர்ந்து, அருகில் இருந்த துணிக்கடையின் கேமராவை பரிசோதித்த போது, மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து பழனி நகர காவல் துறையினரிடம், சிசிடிவி காட்சிகளை வைத்து அப்துல் சமது புகார் அளித்து உள்ளார். பகல் நேரத்திலேயே இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.