ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீஅபிராமி அம்மன் ஆடிப்பூரவிழா தீர்த்தவாரி! - பத்தாவது நாள் உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று ஆடிப்பூரவிழா தீர்த்தவாரி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை அருகே உலகப்புகழ் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக ஸ்ரீஅபிராமி அம்மன் 'அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய திருவிளையாடல்' உள்ளிட்ட பல்வேறு தலபெருமைகளை உடைய இவ்வாலயத்தில் ’ஸ்ரீஅபிராமி அம்மன் ஆடிப்பூர பிரமோற்சவ விழா’ கடந்த 23ஆம் தேதி தங்க கொடிமரத்தில் ரிஷபகொடி ஏற்றப்பட்டு 10 நாள் உற்சவம் நடைபெற்றது. பத்தாவது நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று ஆடிப்பூரவிழா தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீஅபிராமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரி, சோமாஸ்கந்தருடன் கோயில் திருக்குளத்தில் எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டப்பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST