கிருஷ்ணா (ஆந்திரா) : மழைக் கண்டு மகிழாத மனமிங்கு உண்டா? மாலை மயங்கும் நேரத்தில், மேகத்தின் கரு விழிகள் பூமிக்கு மேல் வட்டமிட, சப்தத்துடன் விண்ணைப் பிளந்து பொழியும் காலத்தில் வரவேற்கும் முதல் ஜீவன் தவளை. பொதுவாக நம்மூர் தவளைகள் கறுப்பு நிறத்தில் காணப்படும். ஆனால், ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் காணப்படும் மஞ்சள் தவளைகளை காணொலியில் காணலாம். மஞ்சள் தவளைகள் மிகமிக அரியதாகும். இது ஆந்திரா மற்றும் ஓடிசாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.