தாய்க்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்த மகள்கள்! - corona news
🎬 Watch Now: Feature Video

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். அம்மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத காரணத்தால் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது இரண்டு மகள்களும் வாயோடு வாய் வைத்து அவருக்கு சுவாசம் கொடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.