அரசு நிர்ணயித்த நேரத்தை பொருட்படுத்தாத டாஸ்மாக்... காலையில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ்!
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பேருந்துநிலையம் மற்றும் பம்மல் போலீஸ் பூத் அருகில் உள்ள பாரிலும் சட்டவிரோதமாக, காலையிலேயே மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. அரசு நிர்ணயித்த நேரத்தில், என்றில்லாமல் 24 மணி நேரமும் பாரை திறந்து வைத்துக்கொண்டு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது போன்ற சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தாமல் காவல் துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர், என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST