ETV Bharat / sukhibhava

அமெரிக்காவில் பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தம்.. மருத்துவர்கள் சாதனை! - US surgeons transplant pig heart in human

அமெரிக்காவில், பன்றியின் இதயத்தை 57 வயது நபருக்கு பொருத்தி அமெரிக்க அறுவை சிகிச்சை டாக்டர்கள் மாபெரும் சாதனையை படைத்துள்ளனர். மருத்துவத் துறையில் இது மற்றுமொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

US surgeons
US surgeons
author img

By

Published : Jan 11, 2022, 5:32 PM IST

வாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இவருக்கு வேறு ஒருவரின் இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற இக்கட்டான நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.

இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.

எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும்.

முன்னதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டிசம்பர் 31 அன்று அறுவை சிகிச்சைக்கு அவசர அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நபரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அவருக்கு ஒரு மாதம் வரை மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்ட்லி பி. கிரிஃபித் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “நாங்கள் எச்சரிக்கையுடன் தொடர்கிறோம், ஆனால் இந்த உலகில் முதல் அறுவை சிகிச்சை எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஒரு முக்கியமான புதிய விருப்பத்தை வழங்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம், நியூயார்க்கில் மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஃபிட் ஆக இருக்க 10 டிப்ஸ்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இவருக்கு வேறு ஒருவரின் இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற இக்கட்டான நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.

இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.

எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும்.

முன்னதாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டிசம்பர் 31 அன்று அறுவை சிகிச்சைக்கு அவசர அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நபரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அவருக்கு ஒரு மாதம் வரை மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்ட்லி பி. கிரிஃபித் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “நாங்கள் எச்சரிக்கையுடன் தொடர்கிறோம், ஆனால் இந்த உலகில் முதல் அறுவை சிகிச்சை எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஒரு முக்கியமான புதிய விருப்பத்தை வழங்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம், நியூயார்க்கில் மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஃபிட் ஆக இருக்க 10 டிப்ஸ்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.