ETV Bharat / state

சாத்தூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு

author img

By

Published : Dec 25, 2021, 8:44 AM IST

திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளிப் பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு
சாத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சந்திராதேவி (23), கரோலின் எஸ்தர் (23) ஆகிய இருவரும் சாத்தூரில் உள்ள கூட்டுறவுத் தொழிற் கல்லூரியில் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து இருவரும், இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது சிவகாசி சாலையில் மேட்டமலையை அடுத்து தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருக்கும்போது தனியார்ப் பள்ளியிலிருந்து வெளியே வந்த பள்ளிப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சந்திராதேவி, கரோலின் எஸ்தர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சந்திராதேவி மட்டும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், சம்பவம் குறித்துத் தகவலறிந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து கரோலின் எஸ்தரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அதன்பின்னர் உயிரிழந்த சந்திராதேவியின் உடலை உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: Night Curfew: தமிழ்நாட்டிற்கு இரவு நேர ஊரடங்கு அவசியமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் புதுத்தகவல்

விருதுநகர்: சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சந்திராதேவி (23), கரோலின் எஸ்தர் (23) ஆகிய இருவரும் சாத்தூரில் உள்ள கூட்டுறவுத் தொழிற் கல்லூரியில் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து இருவரும், இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது சிவகாசி சாலையில் மேட்டமலையை அடுத்து தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருக்கும்போது தனியார்ப் பள்ளியிலிருந்து வெளியே வந்த பள்ளிப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சந்திராதேவி, கரோலின் எஸ்தர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சந்திராதேவி மட்டும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும், சம்பவம் குறித்துத் தகவலறிந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து கரோலின் எஸ்தரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அதன்பின்னர் உயிரிழந்த சந்திராதேவியின் உடலை உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: Night Curfew: தமிழ்நாட்டிற்கு இரவு நேர ஊரடங்கு அவசியமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் புதுத்தகவல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.