ETV Bharat / state

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு சீல்; விருதுநகர் நகராட்சி அதிரடி! - viruthunagar municipality

விருதுநகர்: நகராட்சிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத ஏழு கடைகளுக்கு நகராட்சி ஆணையர் இன்று பூட்டி சீல் வைத்தார்.

வரி கட்டாத கடைகளுக்கு சீல்
author img

By

Published : Apr 23, 2019, 7:27 PM IST

விருதுநகர் காசுக்கடை பஜாரில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் ஏழு கடைகள் செயல்பட்டுவருகின்றன. அந்தக் கடைகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சக்திவேல் சொத்துவரி செலுத்தாமல் இருந்துள்ளார்.

நிலுவைத்தொகை ரூ.51 ஆயிரத்து 660-ஐ கட்டும்படி நகராட்சி நிர்வாகத்தில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் சக்திவேல், வரி கட்டாமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில், சக்திவேலுவுடைய 7 கடைகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் ஏழு கடைகளுக்கு சீல் வைத்தனர்.

பின்னர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் ஜப்தி நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

நகராட்சியில் பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கும், நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கும் தேவையான நிதிநிலை குறைவாக உள்ளதால் தீவிர வரி வசூலில் இறங்கியுள்ளோம்.

நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்பு ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ.13 கோடி நிலுவையில் இருந்தது. அதில், தற்போது ரூ.9 கோடி வரை வசூல் செய்துள்ளோம்" என்றார்.

வரி கட்டாத கடைகளுக்கு சீல்

விருதுநகர் காசுக்கடை பஜாரில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் ஏழு கடைகள் செயல்பட்டுவருகின்றன. அந்தக் கடைகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக சக்திவேல் சொத்துவரி செலுத்தாமல் இருந்துள்ளார்.

நிலுவைத்தொகை ரூ.51 ஆயிரத்து 660-ஐ கட்டும்படி நகராட்சி நிர்வாகத்தில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் சக்திவேல், வரி கட்டாமல் இழுத்தடித்து வந்தார். இந்நிலையில், சக்திவேலுவுடைய 7 கடைகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் ஏழு கடைகளுக்கு சீல் வைத்தனர்.

பின்னர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் ஜப்தி நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

நகராட்சியில் பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கும், நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கும் தேவையான நிதிநிலை குறைவாக உள்ளதால் தீவிர வரி வசூலில் இறங்கியுள்ளோம்.

நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்பு ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ.13 கோடி நிலுவையில் இருந்தது. அதில், தற்போது ரூ.9 கோடி வரை வசூல் செய்துள்ளோம்" என்றார்.

வரி கட்டாத கடைகளுக்கு சீல்
Intro:விருதுநகர்
23-04-19

நகராட்சிக்கு சொந்தமான சொத்துக்களுக்கு வரி கொடுக்காத கடைகளுக்கு நகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது


Body:விருதுநகரில் நகராட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத ஏழு கடைகளுக்கு நகராட்சி ஆணையர் பூட்டி சீல் வைத்தார் விருதுநகர் காசுக்கடை பஜாரில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஏழு கடைகள் செயல்பட்டு வருகின்றது அந்த கடைக்கு கடந்த 5 ஆண்டுகளாக சக்திவேல் சொத்துவரி செலுத்தாமல் நிலுவைத்தொகை 51,660 ரூபாய் உள்ள நிலையில் இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் சக்திவேல் சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் அவருடைய 7 கடைகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் ஏழு கடைகளுக்கு சீல் வைத்தனர். அதைத் தொடர்ந்து ஈடிவி செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கூறியதாவது நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவை தொகை அதிகமான அளவில் நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கு கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையும் ஜப்தி நடவடிக்கையை தொடர்ந்து வருகிறோம். மேலும் நகராட்சியில் பொது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கும் நகராட்சி ஊழியர்களுக்கு ஊதியங்களை வழங்குவதற்கும் தேவையான நிதி நிலை குறைவாக உள்ளதால் தீவிர வரிவசூலில் நகராட்சி இறங்கியுள்ளோம். மேலும் நீண்ட காலமாக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்பு ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது இதில் கடந்த வருடம் 13 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த நகராட்சிக்கு சொந்தமான வரியில் தற்போது 9 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பேட்டி: பார்த்த சாரதி ( நகராட்சி ஆணையர்)


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.