ETV Bharat / state

பேனர்களுக்கு 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்... தொழிலாளர்கள் துக்கம் அனுசரிப்பு!

author img

By

Published : Sep 22, 2019, 6:59 PM IST

Updated : Sep 22, 2019, 7:06 PM IST

விருதுநகர்: பேனர் வைக்க தடைவிதிக்கப்பட்டதால், பேனர்களுக்கு 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதங்கத்தை டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

digital-banner-workers

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அன்று முதலே டிஜிட்டல் பேனர் தொழில் சற்று மந்தமாகவே இருந்துவருதாக அந்த ஊழியர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதன் காரணத்தால் அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் பேனர், விளம்பர பேனர்கள் வைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இந்த தொழிலை நம்பியுள்ள நேரடியாகவும் மறைமுகமாகவும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 150க்கும் மேற்பட்ட பேனர் அச்சிடும் உரிமையாளர்கள் இந்த தொழிலைச் செய்துவருகிறார்கள். அவர்கள் சார்பாக இன்று பல்வேறு பகுதிகளில் 'பேனர்களுக்கு கண்ணீர் அஞ்சலி' என போஸ்டர் அடித்தும், இதே பேனரை அவர்களின் கடை முன் கட்டியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பேனர் உரிமையாளர்கள் பேசுகையில், அனைத்து அரசியல் கட்சியினரும் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே தொழிலை நம்பியுள்ள மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், பேனர் தொழிலை நம்பி இருப்போரின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அனைத்து கட்சியினரும் டிஜிட்டல் பேனர் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேனர்களுக்கு 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்

மேலும் படிக்க: 'நீங்கள் பேனர் வைத்துதான் உங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை' - நடிகர் சூர்யா

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அன்று முதலே டிஜிட்டல் பேனர் தொழில் சற்று மந்தமாகவே இருந்துவருதாக அந்த ஊழியர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதன் காரணத்தால் அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் பேனர், விளம்பர பேனர்கள் வைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இந்த தொழிலை நம்பியுள்ள நேரடியாகவும் மறைமுகமாகவும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 150க்கும் மேற்பட்ட பேனர் அச்சிடும் உரிமையாளர்கள் இந்த தொழிலைச் செய்துவருகிறார்கள். அவர்கள் சார்பாக இன்று பல்வேறு பகுதிகளில் 'பேனர்களுக்கு கண்ணீர் அஞ்சலி' என போஸ்டர் அடித்தும், இதே பேனரை அவர்களின் கடை முன் கட்டியும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பேனர் உரிமையாளர்கள் பேசுகையில், அனைத்து அரசியல் கட்சியினரும் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே தொழிலை நம்பியுள்ள மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், பேனர் தொழிலை நம்பி இருப்போரின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அனைத்து கட்சியினரும் டிஜிட்டல் பேனர் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேனர்களுக்கு 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்

மேலும் படிக்க: 'நீங்கள் பேனர் வைத்துதான் உங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை' - நடிகர் சூர்யா

Intro:விருதுநகர்
22-09-19

டிஜிட்டல் பேனர் தடை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்த  டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள்

Tn_vnr_01_digital_banner_flex_vis_script_7204885Body:டிஜிட்டல் பேனர் தடை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்த  டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள்.. அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள்..

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது .அன்று முதலே டிஜிட்டல்  பேனர்  தொழில்கள் சற்று மந்தமாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் பேனர் விழுந்து சுபாஸ்ரீ என்ற இளம் பெண்  பலியானார். இதன்  காரணத்தால் அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் பேனர் விளம்பர பேனர்கள் வைக்கபோவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதே தொழிலை நம்பியுள்ள நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 4லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பேனர் உற்பத்தியாளர்கள் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கடைகளுக்கு கண்ணீர் அஞ்சலி என  போஸ்டர் அடித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது கடை முன்னும் இதே பேனரை கட்டியுள்ளனர். மேலும்  விருதுநகர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர் கடைகள் உற்பத்தியாளர்கள் இதே தொழிலை நம்பி உள்ளனர் .அரசு மற்றும் அனைத்து கட்சி கட்சியினர் இந்த நிலைப்பாட்டால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே தொழிலை நம்பியுள்ள மாவட்டத்தில் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சியினரும் டிஜிடல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
Last Updated : Sep 22, 2019, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.