ETV Bharat / state

பெண்கள் தங்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்கொணர வேண்டும் -மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி

author img

By

Published : Mar 22, 2022, 11:15 PM IST

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி பொன்னி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்கொணர வேண்டும் -மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி
பெண்கள் தங்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்கொணர வேண்டும் -மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி

விருதுநகர்:விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, ’’நேற்றைய முன்தினம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் தன்னை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலை செய்த 8 பேர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹரன் என்ற இளைஞர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்ளிட்ட 8 பேரை பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கில் அந்த இளைஞர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது அந்த இளம்பெண் எங்களுடைய பராமரிப்பில் உள்ளார். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகநலத் துறையின் ஆலோசனை வழங்கப்பட்டுத் தங்க வைக்கப்பட்டு உள்ளார்’ என்றார்.

பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,’

மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பெண்கள் யாரிடம் பழகுகிறோம் என்று தெரிந்து பார்த்துப் பழக வேண்டும் எந்த வலையிலும் சிக்கி விடக்கூடாது என்றார்.

பெண்கள் தொடர்பான குற்றத்தில் அதிக கவனம்

பெண்கள் தங்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்கொணர வேண்டும் -மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் போது புகாரை மாற்றி அளிக்கக் கூடிய சூழல் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’தமிழ்நாடு காவல்துறையில் அது போன்ற புகாரை மாற்றி வாங்குவது கிடையாது பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிக அளவில் கண்காணிக்கிறோம் ’என்றார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வேறு ஏதேனும் பெண்கள் புகார் அளித்துள்ளனரா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு ’தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் விசாரணையில் தெரியவரும்’ என்றார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண் காவலர்கள் மூலம் ஒரு புதிய திட்டம் தயார் செய்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அந்த இடத்தின் பெயர் மற்றும் திட்டம் குறித்த முழு விளக்கங்களையும் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விருதுநகர் பாலியல் வழக்கு: திமுக பிரமுகர் அதிரடி சஸ்பெண்ட்

விருதுநகர்:விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, ’’நேற்றைய முன்தினம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் தன்னை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலை செய்த 8 பேர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹரன் என்ற இளைஞர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்ளிட்ட 8 பேரை பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கில் அந்த இளைஞர்களைக் கைது செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது அந்த இளம்பெண் எங்களுடைய பராமரிப்பில் உள்ளார். ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகநலத் துறையின் ஆலோசனை வழங்கப்பட்டுத் தங்க வைக்கப்பட்டு உள்ளார்’ என்றார்.

பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,’

மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பாலியல் குற்றங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பெண்கள் யாரிடம் பழகுகிறோம் என்று தெரிந்து பார்த்துப் பழக வேண்டும் எந்த வலையிலும் சிக்கி விடக்கூடாது என்றார்.

பெண்கள் தொடர்பான குற்றத்தில் அதிக கவனம்

பெண்கள் தங்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்கொணர வேண்டும் -மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் போது புகாரை மாற்றி அளிக்கக் கூடிய சூழல் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’தமிழ்நாடு காவல்துறையில் அது போன்ற புகாரை மாற்றி வாங்குவது கிடையாது பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிக அளவில் கண்காணிக்கிறோம் ’என்றார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வேறு ஏதேனும் பெண்கள் புகார் அளித்துள்ளனரா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு ’தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம் விசாரணையில் தெரியவரும்’ என்றார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண் காவலர்கள் மூலம் ஒரு புதிய திட்டம் தயார் செய்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அந்த இடத்தின் பெயர் மற்றும் திட்டம் குறித்த முழு விளக்கங்களையும் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விருதுநகர் பாலியல் வழக்கு: திமுக பிரமுகர் அதிரடி சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.