ETV Bharat / state

சாணத்தில் சாமி சிலை! பக்தியோடு பசுமையும் பரவட்டும்! - விருதுநகர் இளைஞர் புது முயற்சி

விருதுநகர் மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர் சங்கர் என்பவர் சாணத்தால் ஆன விநாயகர் சிலைகளை செய்துவருவதால் அவருடைய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சாணத்தில் சாமி சிலை! பக்தியோடு பசுமையும் பரவட்டும்!
author img

By

Published : Aug 25, 2019, 4:58 PM IST

”ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ரசாயனம் கலந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் மாட்டுச்சாணத்தில் இருந்து சிலை செய்ய வேண்டும் என நினைத்தேன். தற்போது மாட்டுச் சாணத்துடன் மர விதைகளை கலந்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்துவருகிறேன். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அதனை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது. அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடியும் முளைக்கும்" என்ற சங்கரின் பேச்சில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம் ஒழிந்திருந்தது. விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சங்கர்.

சாணத்தில் சாமி சிலை! - வீடியோ தொகுப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு வடிவங்களில் ஆங்காங்கே ஏராளமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுவருகின்றன. பெரும்பாலும் ரசாயன கலவை பூசப்பட்ட சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்தி பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதையே நாம் வழக்கத்தில் கொண்டுள்ளோம்.

அதே நேரத்தில் இறைவனை கொண்டாடும் ஆர்வத்திற்கு முன் இயற்கையின் மீதான அக்கறையை நாம் இழந்துவிடுகிறோம். ரசாயனம் பூசிய சிலையை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகளும் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதை கவனத்தில்கொண்ட சங்கர் மாட்டுச் சாணத்தால் விநாயகர் சிலைகள் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்து வரும் ஆண்டுகளில் இதைவிட பெரிய சிலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவி்க்கிறார்.

”ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ரசாயனம் கலந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் மாட்டுச்சாணத்தில் இருந்து சிலை செய்ய வேண்டும் என நினைத்தேன். தற்போது மாட்டுச் சாணத்துடன் மர விதைகளை கலந்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்துவருகிறேன். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அதனை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது. அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடியும் முளைக்கும்" என்ற சங்கரின் பேச்சில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தத்துவம் ஒழிந்திருந்தது. விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சங்கர்.

சாணத்தில் சாமி சிலை! - வீடியோ தொகுப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு வடிவங்களில் ஆங்காங்கே ஏராளமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுவருகின்றன. பெரும்பாலும் ரசாயன கலவை பூசப்பட்ட சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்தி பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதையே நாம் வழக்கத்தில் கொண்டுள்ளோம்.

அதே நேரத்தில் இறைவனை கொண்டாடும் ஆர்வத்திற்கு முன் இயற்கையின் மீதான அக்கறையை நாம் இழந்துவிடுகிறோம். ரசாயனம் பூசிய சிலையை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகளும் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதை கவனத்தில்கொண்ட சங்கர் மாட்டுச் சாணத்தால் விநாயகர் சிலைகள் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்து வரும் ஆண்டுகளில் இதைவிட பெரிய சிலைகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவி்க்கிறார்.

Intro:விருதுநகர்
25-08-19

சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் நாட்டு மாட்டில் கிடைக்கும் சாணத்தை கொண்டு விருதுநகரில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

Tn_vnr_01_vinayagar_statue_vis_script_7204885Body:நாடு முழுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு  வடிவங்களில் ஆங்காங்கே ஏராளமான  விநாயகர்  சிலைகள்  செய்யப்பட்டு  வருகின்றன. இரசாயனம் பூசப்பட்ட  சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மோசமடைவதுடன் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. 

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசும் ஏற்படாத வகையில் நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தால்  ஆன  சிலைகளை செய்து வருகிறார்  விருதுநகரை  சேர்ந்த  சங்கர்  என்ற  இளைஞர். இது தொடர்பாக அவர்  கூறும்போது, ”ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. எனவே, சிலைகளின் தேவையும் அதிகரிக்கிறது. இரசாயனம்  கலந்த  சிலைகளால்  சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாட்டுச்சாணத்தில் இருந்து சிலை செய்ய வேண்டும் என நினைத்தேன். தற்போது 
மாட்டுச் சாணத்துடன் மர விதைகளை கலந்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்து வருகிறேன். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் அதனை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படாது. அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடி உருவாகிவிடும். இந்த ஆண்டு மக்களிடம் கிடைக்கும் ஆதரவை பொறுத்து வரும் ஆண்டுகளில் இதைவிட பெரிய சிலைகளை செய்ய திட்டமிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.