விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் சமத்துவபுரம் பகுதியில் சாலையோரம் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சாலையோரம் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் நரிக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!
விருதுநகர்: திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு! Unidentified male body found near Tiruchi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7644417-thumbnail-3x2-hda.jpg?imwidth=3840)
இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அருகிலுள்ள காவல் நிலையங்களில் இறந்தவரின் விபரங்கள் சேகரிப்பதற்காக புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் சமத்துவபுரம் பகுதியில் சாலையோரம் சுமார் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சாலையோரம் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் நரிக்குடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அருகிலுள்ள காவல் நிலையங்களில் இறந்தவரின் விபரங்கள் சேகரிப்பதற்காக புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.