ETV Bharat / state

குப்பைத்தொட்டியில்லா நகராட்சியாக மாறிவரும் விருதுநகர்!

author img

By

Published : May 2, 2019, 9:54 PM IST

விருதுநகர்: குப்பைத்தொட்டி இல்லா நகராட்சியை உருவாக்குவதற்காக, பொதுமக்களிடமிருந்து நேரடியாக குப்பைகள் பெற்றுத் தரம் பிரித்து நகராட்சி ஊழியர்கள் திடக்கழிவு மேலாண்மை செய்து வருவது,பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விருதுநகர்

இந்த புதிய திட்டம் குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அளித்த பேட்டியில், " இந்தத் திட்டம் மூலம் குப்பைகளைக் கொட்டி வைக்கும் சூழல் மாறி வருகிறது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குப்பைகளை பெற்று, மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் பிரித்து வருகின்றனர். குப்பை இல்லாத, குப்பைத்தொட்டி இல்லாத நகராட்சியாக விருதுநகரை மாற்றி வருகிறோம்", என்றார்.

விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், " 23 இடங்களுக்கு மேலாக இம்மாதிரியான திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்களில் இருக்கும் குப்பை கழிவுகளை நீக்குவதற்காக ஆறு பிரத்தியேக குழுக்களை அமைத்துள்ளோம். இதற்கு முன்பாக குப்பை கொட்டப்பட்ட இடங்களில் கோலங்கள் போடுதல், பூச்செடிகள் வளர்த்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் அந்த இடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் மன நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு, விருதுநகர் நகராட்சி குப்பை இல்லா நகராட்சியாக மாறும் என நம்புகிறேன் ", தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அளித்த பேட்டியில், " இந்தத் திட்டம் மூலம் குப்பைகளைக் கொட்டி வைக்கும் சூழல் மாறி வருகிறது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குப்பைகளை பெற்று, மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் பிரித்து வருகின்றனர். குப்பை இல்லாத, குப்பைத்தொட்டி இல்லாத நகராட்சியாக விருதுநகரை மாற்றி வருகிறோம்", என்றார்.

விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், " 23 இடங்களுக்கு மேலாக இம்மாதிரியான திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்களில் இருக்கும் குப்பை கழிவுகளை நீக்குவதற்காக ஆறு பிரத்தியேக குழுக்களை அமைத்துள்ளோம். இதற்கு முன்பாக குப்பை கொட்டப்பட்ட இடங்களில் கோலங்கள் போடுதல், பூச்செடிகள் வளர்த்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் அந்த இடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் மன நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு, விருதுநகர் நகராட்சி குப்பை இல்லா நகராட்சியாக மாறும் என நம்புகிறேன் ", தெரிவித்தார்.

Intro:விருதுநகர்
02-05-19

குப்பை மற்றும் குப்பைத்தொட்டி இல்லா விருதுநகர் நகராட்சி




Body:விருதுநகர் மாவட்ட நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை முன்னிட்டு குப்பை மற்றும் குப்பைத்தொட்டி இல்லா நகராட்சியை ஏற்படுத்துவதற்காக நேரடியாக பொதுமக்களிடமிருந்து நகராட்சி ஊழியர்கள் மூலமாக குப்பைகள் பெறப்பட்டு தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை செய்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி ஈ டிவி செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். இந்த புதிய செயல்பாடுகள் மூலமாக வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் நேரடியாகச் சென்று பொதுமக்களிடம் குப்பைகளை பெற்று மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் பயன்படுத்துகிறோம் இதன் மூலம் குப்பை கிடங்குகளில் குப்பைகளை கொட்டி வைக்கும் சூழல் மாற்றப்படுகிறது எனவே குப்பை இல்லாத குப்பைத்தொட்டி இல்லாத நகராட்சியாக இந்தப் பகுதிகளை மாற்றம் செய்து கொண்டு இருக்கிறோம் என்றும் நகராட்சியில் 23 இடங்களுக்கு மேலாக இம்மாதிரியான திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்தப்பட்டுள்ளது மேலும் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் கால்வாய்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதை நீக்குவதற்காக ஆறு பிரத்தியேக குழுக்களை அமைத்து கால்வாய்களில் கழிவுகளை கொட்டுபவர்களிடம் 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் சுகாதாரமான நகராட்சி உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் மேலும் தொடர்ந்து கூறியவர் இந்தத் திட்டத்திற்கு நகராட்சியில் உள்ள 80 முதல் 90 சதவீத மக்கள் வரவேற்பு அளித்துள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் விரைவில் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் இதுகுறித்து வாகனங்கள் மற்றும் அனிமேஷன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஒன்பது வாகனங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை தரம் பிரித்து பெறப்பட்டு கழிவுகளை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது மேலும் இதற்கு முன்பாக குப்பை கொட்டப்பட்டு இடங்களில் கோலங்கள் போடுதல் பூச்செடிகள் வளர்த்தல் தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் அந்த இடங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் மன நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு விருதுநகர் நகராட்சி குப்பை இல்லா நகராட்சியாக முழுமையாக மாற்றம் பெறும் என நம்பிக்கையாக தெரிவித்தார்

பேட்டி: பார்த்தசாரதி (நகராட்சி ஆணையர்)


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.