ETV Bharat / state

மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு! - மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த மூன்று வயது சிறுவன்

விருதுநகர்: ஆமத்தூர் அருகே மழை நீர் சேகரிப்புத் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ree-year-old-boy-die
author img

By

Published : Oct 30, 2019, 3:59 PM IST

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் ருத்ரன்(3).

இன்று காலை அதே ஊரில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்ற குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தையைக் காணாமல் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள சுமார் நான்கடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது.

குழந்தை விழுந்த மழை நீர் சேகரிப்புத் தொட்டி

உடனடியாக குழந்தையை மீட்ட குடும்பத்தினர் அதனை அம்மாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

விருதுநகரில் குடிபோதையில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் ருத்ரன்(3).

இன்று காலை அதே ஊரில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்ற குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தையைக் காணாமல் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள சுமார் நான்கடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது.

குழந்தை விழுந்த மழை நீர் சேகரிப்புத் தொட்டி

உடனடியாக குழந்தையை மீட்ட குடும்பத்தினர் அதனை அம்மாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

விருதுநகரில் குடிபோதையில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Intro:விருதுநகர்
30-10-19

மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

Tn_vnr_03_children_death_photo_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ருத்ரன் (3). அம்பத்தூர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தாத்தா மணிகண்டன் வீட்டுக்கு சென்றிருந்தார். இன்று காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ருத்ரன் வெகுநேரமாக காணாததால் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி தேடினர்.
அப்பொழுது வீட்டின் அருகே உள்ள சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் சிறுவன் ருத்திரன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதை அடுத்து குடும்பத்தினர் சிறுவன் ருத்ரனை மீட்டு ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுவன் ருத்ரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர் ‌ இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.