ETV Bharat / state

விருதுநகரில் தேர்தல் விதிமுறைகள் மீறல்: அமமுகவினர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

author img

By

Published : Apr 1, 2021, 11:33 AM IST

தேர்தல் விதிமுறைகளை மீறிய அமமுகவினர்
தேர்தல் விதிமுறைகளை மீறிய அமமுகவினர்

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கோகுலம் தங்கராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

விருதுநகர் நான்கு வழிச் சாலையில் தேர்தல் விதிமுறைப்படி அங்கிருந்த எம்ஜிஆர் சிலை மூடிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் வருவதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மூடிவைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையில் இருந்த துணியைத் திறந்துவைத்தனர்.

இதையறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் எம்ஜிஆர் சிலையைத் தேர்தல் விதிமுறைப்படி துணியால் மூடினர். இச்செயல் தேர்தல் விதிமுறையை மீறி நடந்ததால், காவல் துறையினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை நம்பி களம் காண்கிறேன் - ராமநாதபுர அமமுக வேட்பாளர்

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கோகுலம் தங்கராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

விருதுநகர் நான்கு வழிச் சாலையில் தேர்தல் விதிமுறைப்படி அங்கிருந்த எம்ஜிஆர் சிலை மூடிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிடிவி தினகரன் வருவதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மூடிவைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையில் இருந்த துணியைத் திறந்துவைத்தனர்.

இதையறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் எம்ஜிஆர் சிலையைத் தேர்தல் விதிமுறைப்படி துணியால் மூடினர். இச்செயல் தேர்தல் விதிமுறையை மீறி நடந்ததால், காவல் துறையினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை நம்பி களம் காண்கிறேன் - ராமநாதபுர அமமுக வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.