ETV Bharat / state

ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!

author img

By

Published : Jan 16, 2022, 9:56 AM IST

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகாரளித்த நபர் இன்று (ஜன.16) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திரபாலாஜி மீது புகாரளித்த நபர் கைது
ராஜேந்திரபாலாஜி மீது புகாரளித்த நபர் கைது

விருதுநகர்: ராமுதேவன் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி. இவர் அளித்த பண மோசடி புகாரின் பேரில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையின் பேரில் இடைக்கால பிணையில் விடுதலையானார்.

சில மாதங்களுக்கு முன்னர் விஜய நல்லதம்பி மீது, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் வேலை வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மூன்று மாதமாக விஜய நல்லதம்பி தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் இன்று (ஜன.16) விஜய நல்லதம்பியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனின் தம்பி ஆவார்.

இதையும் படிங்க: முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்?

விருதுநகர்: ராமுதேவன் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி. இவர் அளித்த பண மோசடி புகாரின் பேரில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையின் பேரில் இடைக்கால பிணையில் விடுதலையானார்.

சில மாதங்களுக்கு முன்னர் விஜய நல்லதம்பி மீது, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் வேலை வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மூன்று மாதமாக விஜய நல்லதம்பி தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் இன்று (ஜன.16) விஜய நல்லதம்பியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனின் தம்பி ஆவார்.

இதையும் படிங்க: முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.