ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவுப்படி தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி!

author img

By

Published : Dec 4, 2019, 9:25 AM IST

விருதுநகர்: நீதிமன்ற உத்தரவுப்படி தாலுகா அலுவலகத்திலிருந்து ஜப்தி செய்யப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டதால் பரபரப்பு.

விருதுநகர்
Thaluk office things seized

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு 1 ஏக்கர் 55 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்திற்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த தொகை போதாது என கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு இடத்தின் உரிமையாளர்களான உமாமகேஸ்வரி, பொன் வெங்கடேசன் குமார் உட்பட சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் நில உரிமையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரப்படி தொகை வழங்கப்படாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மரமேஜைகள், நாற்காலிகள், தொலைபேசி, கணிணிகள், பீரோ, ஜீப் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான 366 பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு பொருளாக ஜப்தி செய்து வெளியே கொண்டு வந்து வைக்கப்பட்டது.

தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி

இந்நிலையில் வருவாய்த் துறையினர் மனுதாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: ஊர் முழுவதும் புகை மூட்டம்.. மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு 1 ஏக்கர் 55 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்திற்கு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த தொகை போதாது என கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு இடத்தின் உரிமையாளர்களான உமாமகேஸ்வரி, பொன் வெங்கடேசன் குமார் உட்பட சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் நில உரிமையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிமன்ற உத்தரப்படி தொகை வழங்கப்படாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மரமேஜைகள், நாற்காலிகள், தொலைபேசி, கணிணிகள், பீரோ, ஜீப் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான 366 பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு பொருளாக ஜப்தி செய்து வெளியே கொண்டு வந்து வைக்கப்பட்டது.

தாலுகா அலுவலக பொருட்கள் ஜப்தி

இந்நிலையில் வருவாய்த் துறையினர் மனுதாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: ஊர் முழுவதும் புகை மூட்டம்.. மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிப்பு...

Intro:விருதுநகர்
03-12-19

தாலுகா அலுவலகத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டு பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டதால் பரபரப்பு

Tn_vnr_07_thaluk_office_things_seized_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டு பொருட்கள் வெளியே எடுத்து வைக்கப்பட்டதால் பரபரப்பு...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக கடந்த 1991 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் 55 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த தொகை போதாது என கூடுதல் இழப்பீட்டு தொகை கேட்டு இடத்தின் உரிமையாளர்களான உமாமகேஸ்வரி, பொன் வெங்கடேசன் குமார் உட்பட சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம் நில உரிமையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரப்படி தொகை வழங்கப்படாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மரமேஜைகள், நாற்காலிகள், ஃபேன்கள், கம்ப்யூட்டர்கள், பீரோ, ஜீப் உள்ளிட்ட சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 366 பொருட்களை நீதிமன்ற உத்தரவுபடி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து அலுவலக ஊழியர்கள் பணியில் இருந்தபோதே ஒவ்வொரு பொருளாக ஜப்தி செய்து ஒவ்வொரு பொருளாக வெளியே கொண்டு வந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் வருவாய் துறையினர் மனுதாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் சற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.