ETV Bharat / state

பாதாள சாக்கடை பணியில் திடீர் மண்சரிவு - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Jul 17, 2022, 9:48 AM IST

சாத்தூரில் பாதாள சாக்கடை பணியின்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பாதாள சாக்கடை பணியில் திடீர் மண்சரிவு- 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
பாதாள சாக்கடை பணியில் திடீர் மண்சரிவு- 2 தொழிலாளிகள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த ஒராண்டுகாலமாக பாதாள சாக்கடை திட்ட பணிக்களுக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 16) இரவு சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குழி தோண்டும் போது தீடீரென்று மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி சக்திவேல் (40), கிருஷ்ணமூர்த்தி (50) என்ற இருவர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். மண் சரிந்து விழுந்ததில் இருவரும் அங்கு சிக்கிக் கொண்டதாக தெரியவருகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

பாதாள சாக்கடை பணியில் திடீர் மண்சரிவு- 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் மண்ணில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் போலீசார் மண்ணில் சிக்கி இறந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடலை உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு பாடங்கள் கடினம்... - கடிதம் எழுதிவிட்டு அரியலூர் மாணவி தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த ஒராண்டுகாலமாக பாதாள சாக்கடை திட்ட பணிக்களுக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 16) இரவு சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குழி தோண்டும் போது தீடீரென்று மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி சக்திவேல் (40), கிருஷ்ணமூர்த்தி (50) என்ற இருவர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். மண் சரிந்து விழுந்ததில் இருவரும் அங்கு சிக்கிக் கொண்டதாக தெரியவருகிறது. இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

பாதாள சாக்கடை பணியில் திடீர் மண்சரிவு- 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள் ஜேசிபி இயந்திர உதவியுடன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப் பின் மண்ணில் புதைந்த இருவரையும் சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் போலீசார் மண்ணில் சிக்கி இறந்த சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உடலை உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் தேர்வு பாடங்கள் கடினம்... - கடிதம் எழுதிவிட்டு அரியலூர் மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.