ETV Bharat / state

சூடி தந்த சுடர்க்கொடியை பாடி மகிழ்ந்த பக்தர்கள்! - Thiruppavai debut at Srivilliputhur SriAndal Temple

விருதுநகர்: மார்கழி முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
author img

By

Published : Dec 17, 2019, 1:30 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவையானது மார்கழி மாதத்தில் இயற்றப்பட்டதாகும்.

இதனால் மற்ற பகுதிகளை விட ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

முன்னதாக தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு தங்கத்தால் நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடத்தில் அசத்தும் ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ ஆண்டாள் பாடிய திருப்பாவையானது மார்கழி மாதத்தில் இயற்றப்பட்டதாகும்.

இதனால் மற்ற பகுதிகளை விட ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

முன்னதாக தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு தங்கத்தால் நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடத்தில் அசத்தும் ஆசிரியர்

Intro:விருதுநகா்
17-12-19

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழிமாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Tn_vnr_02_aandal_temple_function_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாதப்பிறப்பு சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தலமானது மகாலட்சுமியின் அம்சமாகிய ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாக அவதரித்து இறைவனுக்காக திருப்பாவை பாடி பாமாலை சூட்டியது மட்டுமில்லாமல் பூமாலை சூட்டி இறைவனை அடைந்த இடமாகும்.இவ்வாறாக ஸ்ரீ ஆண்டாள் பாடிய இந்த திருப்பாவை யானது மார்கழி மாதத்தில் இயற்றப்பட்டதாகும் அதன் காரணமாக மற்ற ஊர்களை விட ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பு ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டான தனிச்சிறப்பு என்னவென்றால் மற்ற ஊர்களில் கார்த்திகை மாதம் முடிந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு பின்பே மார்கழி மாத பூஜைகள் ஆரம்பிப்பது வழக்கம் ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொருத்தமட்டில் சூரிய பகவான் எந்த நேரத்தில் தனுர் ராசிக்கு பிரவேசிக்கிறாரோ அந்த நேரத்திலேயே மார்கழி மாதப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் நேற்று இரவு முதல் மார்கழி மாதப்பிறப்பு நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது. ஸ்ரீ ஆண்டாள் இறைவனை அடைய நோன்பு நோற்ற இந்த மார்கழி மாதத்தில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் விரதமிருந்தால் கண்டிப்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் இன்று நடைபெற்ற மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜையை முன்னிட்டு தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.