ETV Bharat / state

3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததால் சாலை மறியல்

author img

By

Published : Aug 19, 2019, 7:32 PM IST

விருதுநகர்: மல்லாங்கிணறு அருகே உள்ள அயன்ரெட்டியாப்பட்டியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, 200க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியாப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று, மல்லாங்கிணறு பேரூராட்சியில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதததை கண்டித்த கிராம மக்கள், விருதுநகர் - காரியாபட்டி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.

இதையறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியாப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என்று, மல்லாங்கிணறு பேரூராட்சியில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதததை கண்டித்த கிராம மக்கள், விருதுநகர் - காரியாபட்டி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.

இதையறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Intro:விருதுநகர்
18-08-19

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Tn_vnr_01_public_issue_seige_vis_script_7204885Body:விருதுநகர்
18-08-19

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன்ரெட்டியாப்பட்டியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை என 200க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே அயன் ரெட்டியாபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் மல்லாங்கிணறு பேரூராட்சியில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் விருதுநகர் காரியாபட்டி சாலையில் அயன் ரெட்டியாபட்டி பிரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் காலிகுடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த
காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர் மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஒலிபெருக்கியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்பு பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தான் பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். மேலும் இரண்டு நாட்களில் குடிநீர் வழங்கவில்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்

பேட்டி
வள்ளியம்மாள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.