ETV Bharat / state

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

author img

By

Published : Jul 6, 2019, 12:01 PM IST

Updated : Jul 6, 2019, 12:49 PM IST

விருதுநகர்: விவசாய கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டியை, வனத்துறையினர் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து வரும் மான்கள், முயல்கள், மயில்கள் அவ்வபோது கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இந்நிலையில் திருச்சுழி அடுத்த தமிழ்பாடி கிராமத்திற்கு வனப்பகுதியில் இருந்து வந்த புள்ளி மான்குட்டி ஒன்று தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடுவதைப் பார்த்த கிராம மக்கள், கிணற்றில் இறங்கி மீட்டனர்.

பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயங்களுடன் மீட்கப்பட்ட மானுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து வரும் மான்கள், முயல்கள், மயில்கள் அவ்வபோது கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இந்நிலையில் திருச்சுழி அடுத்த தமிழ்பாடி கிராமத்திற்கு வனப்பகுதியில் இருந்து வந்த புள்ளி மான்குட்டி ஒன்று தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடுவதைப் பார்த்த கிராம மக்கள், கிணற்றில் இறங்கி மீட்டனர்.

பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயங்களுடன் மீட்கப்பட்ட மானுக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.

Intro:விருதுநகர்
05-07-19

விவசாய கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி உயிருடன் மீட்டு
Body:விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் புள்ளிமான் குட்டியை பொதுமக்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதிகளில் சமூக வனக்காடுகள் அதிகமாக உள்ளன. இங்கு, ஏராளமான மான்கள், முயல்கள், கீரி மற்றும் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன.
இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் காடுகளில் வறட்சி நிலவுகிறது. இதனால், சில சமயங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் போது ஒரு சில சமயங்களில் நாய்கள் தாக்கியும், வாகனங்களில் அடிபட்டும் இறந்து விடுகின்றன. இதே போன்று, திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் தங்கராம் என்பவரது விவசாய கிணற்றில் 5 வயதே ஆன பெண் புள்ளிமான் குட்டி தவறி விழுந்து விட்டது. இதனைக் கண்ட அருகில் விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டு இருந்த பொதுமக்கள் கிணற்றில் இறங்கி அந்த புள்ளி மான் குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காயமடைந்த மான் குட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மான் குட்டியை காட்டிற்குள் கொண்டு சென்றனர்.Conclusion:
Last Updated : Jul 6, 2019, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.