ETV Bharat / state

ராஜபாளையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

விருதுநகர்: ராஜபாளையத்தில் ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் நகராட்சி சார்பில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.

author img

By

Published : Apr 25, 2021, 12:43 PM IST

கரோனா ஊரடங்கு
ஊரடங்கு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர், கிராமப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அரசின் உத்தரவுகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் உள்ளனர் .

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வருபவர்கள் சாலையில் ஆங்காங்கே பயணித்தனர். அநாவசியமாக வெளியில் சென்றவர்களை காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

முழு ஊரடங்கினால் சாலைகள் வெறிச்சோடி இருப்பதைப் பயன்படுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை, ரவுண்டானா, காய்கறிச் சந்தை, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மதுரை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்துவருகிறது.

இரண்டு வாகனங்கள் மூலம் ராஜபாளையம் நகரம் முழுவதும், கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர், கிராமப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அரசின் உத்தரவுகளைக் கடைப்பிடித்து பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் உள்ளனர் .

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வருபவர்கள் சாலையில் ஆங்காங்கே பயணித்தனர். அநாவசியமாக வெளியில் சென்றவர்களை காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

முழு ஊரடங்கினால் சாலைகள் வெறிச்சோடி இருப்பதைப் பயன்படுத்தி நகராட்சி நிர்வாகம் சார்பில் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை, ரவுண்டானா, காய்கறிச் சந்தை, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மதுரை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்துவருகிறது.

இரண்டு வாகனங்கள் மூலம் ராஜபாளையம் நகரம் முழுவதும், கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.