ETV Bharat / state

குப்பை மறுசுழற்சி இயந்திரத்தைப் பயன்படுத்த மக்கள் கோரிக்கை

author img

By

Published : Oct 29, 2019, 10:25 AM IST

விருதுநகர்: அல்லம்பட்டி அருகே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

waste recyling machine

விருதுநகரில் அல்லம்பட்டி அருகேயுள்ள மாத்த நாயக்கன்பட்டி பகுதியில் விருதுநகர் நகராட்சி சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் ஒன்று ஒரு கொடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் இயந்திரம் நிறுவப்பட்டது.

ஆனால், விருதுநகர் நகராட்சியில் நிறுவப்பட்ட இயந்திரம் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த இயந்திரம் தற்போது துருபிடித்தும் புதர் மண்டியும் காட்சியளிக்கிறது. இந்நிலையில், அவ்வியந்திரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதர் மண்டி காணப்படும் குப்பை மறுசுழற்சி இயந்திரம்

இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த காசிராஜன் என்பவர் தெரிவிக்கையில், "குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினால் குப்பைகளை உரமாக மாற்றமுடியும். அந்த உரத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கமுடியும்.

இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதோடு மட்டுமல்லாமல், விருதுநகர் நகராட்சியை குப்பைகளற்ற நகராட்சியாக மாற்ற முடியும்" என்றார்.

இதையும் படிங்க: பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

விருதுநகரில் அல்லம்பட்டி அருகேயுள்ள மாத்த நாயக்கன்பட்டி பகுதியில் விருதுநகர் நகராட்சி சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் ஒன்று ஒரு கொடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் இயந்திரம் நிறுவப்பட்டது.

ஆனால், விருதுநகர் நகராட்சியில் நிறுவப்பட்ட இயந்திரம் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த இயந்திரம் தற்போது துருபிடித்தும் புதர் மண்டியும் காட்சியளிக்கிறது. இந்நிலையில், அவ்வியந்திரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதர் மண்டி காணப்படும் குப்பை மறுசுழற்சி இயந்திரம்

இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த காசிராஜன் என்பவர் தெரிவிக்கையில், "குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை முறையாகப் பயன்படுத்தினால் குப்பைகளை உரமாக மாற்றமுடியும். அந்த உரத்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கமுடியும்.

இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதோடு மட்டுமல்லாமல், விருதுநகர் நகராட்சியை குப்பைகளற்ற நகராட்சியாக மாற்ற முடியும்" என்றார்.

இதையும் படிங்க: பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

Intro:விருதுநகர்
28-10-19

குப்பை மறுசுழற்சி இயந்திரத்தை முறையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.

Tn_vnr_01_waste_recycling_machine_vis_script_7204885Body:நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குப்பை மறுசுழற்சி இயந்திரம் செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகரில் அல்லம்பட்டி அருகே மாத்தி நாயக்கன்பட்டி பகுதியில் குப்பை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் ஒரு கோடி ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்போது இருந்த பொறுப்பு விருதுநகர் நகராட்சி ஆணையர் மூலம் நிறுவப்பட்டது. நிறுவப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. விருதுநகர் நகராட்சியை போல் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் குப்பை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டது ஆனால் விருதுநகர் நகராட்சியில் மட்டும் குப்பை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் பயன்பாடு இல்லாமல் போனது. இந்த மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை முறையாக பயன்படுத்தினால் குப்பை கழிவுகளை மறுசுழற்சி மூலம் உரங்களாக மாற்றமுடியும் இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் ஈட்ட முடியும் மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் இந்த குப்பைகளிலிருந்து டெங்கு காய்ச்சல் போன்று கிருமிகள் ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும் மேலும் சுத்தமான குப்பைகள் என்ற நகராட்சியை உருவாக்கமுடியும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பேட்டி:
காசிராஜன் (பொதுமக்கள்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.