ETV Bharat / state

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க...! இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Feb 11, 2020, 7:39 PM IST

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாவாடித்தோப்பு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகமது சபீக் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ''அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்தும் வகையில் சங்பரிவார கருத்துகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாகவும் அவருடைய அமைச்சர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தினார். மேலும், மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் நடந்துகொள்வதாகவும் இந்து, இஸ்லாமியர்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: கஞ்சா கடத்திய இருவர் கைது - ஏழு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாவாடித்தோப்பு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகமது சபீக் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ''அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்தும் வகையில் சங்பரிவார கருத்துகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாகவும் அவருடைய அமைச்சர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தினார். மேலும், மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் நடந்துகொள்வதாகவும் இந்து, இஸ்லாமியர்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க: கஞ்சா கடத்திய இருவர் கைது - ஏழு லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Intro:விருதுநகர்
11-02-2020

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கம் செய்யக்கோரி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tn_vnr_03_minister_against_protest_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாவாடித்தோப்பு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகமதுசபீக் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அப்துல் ரகுமான் சிறப்புரையாற்றினார். அப்போது ''அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்தும் வகையில் சங்பரிவார கருத்துகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாகவும் அவருடைய அமைச்சர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் நடந்துகொள்வதாகவும் இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்த ஆர்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். கூட்டத்தின் மிகுதி காரணமாக காவல்துறை வாகனங்கள் பற்றாக்குறையினால் அரசு பேருந்துகளில் ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துச்சென்றனர்.

பேட்டி:
அப்துல் ரகுமான் (மாநில துணை தலைவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் )Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.