ETV Bharat / state

பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றம் - அமைச்சர் கண்டனம் - திமுக தவழ்ந்து வந்தாலும் வெற்றிபெற முடியாது

விருதுநகா்: புதுச்சேரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம்
author img

By

Published : Dec 25, 2019, 7:49 PM IST


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி புயல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. திமுக பின்தொடர்ந்து தவழ்ந்து வந்தாலும் வெற்றிபெற முடியாது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி விழும்" என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம்

தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் முன்னணி தலைவர்கள் யாரும் பெரியார் குறித்து தவறான கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மேலும், "புதுச்சேரி பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஆணித்தரமாக அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும்" என அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல் ' - ராஜேந்திர பாலாஜி


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி புயல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. திமுக பின்தொடர்ந்து தவழ்ந்து வந்தாலும் வெற்றிபெற முடியாது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி விழும்" என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம்

தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் முன்னணி தலைவர்கள் யாரும் பெரியார் குறித்து தவறான கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மேலும், "புதுச்சேரி பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஆணித்தரமாக அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும்" என அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல் ' - ராஜேந்திர பாலாஜி

Intro:விருதுநகா்
25-12-19

பாண்டிச்சேரியில் நடைபெற்ற பட்டம் வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதை வன்மையாக கண்டிக்கிறோம் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

Tn_vnr_03_rajendra_Balaji_byte_vis_script_7204885Body:பாண்டிச்சேரியில் நடைபெற்ற பட்டம் வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும்
அதே போல் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஆணித்தரமாக அதனை அதிமுக எதிர்த்து குரல் கொடுக்கும் என -தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சாத்தூரில் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமிழகத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி புலிப் பாய்ச்சலில் புயல் வேகத்திலும் சென்று கொண்டிருக்கின்றது. திமுக பின்தொடர்ந்து தவழ்ந்து வந்தாலும் முடியாது. நடைபெற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி விழும் எனவும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்பது முன்னுக்கு பின்னாகத்தான் இருக்கும் என்றார். மேலும் திமுக நடத்திய பேரணி அமைதியாக முடிந்தது இதுவே அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. திமுக நடத்திய பேரணி அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தமிழகத்தில் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து விதமான போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி காவல்துறை அனுமதி கொடுத்து வருகிறது. நடுநிலையாளர்கள், அனைத்து சமுதாய மக்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர். பிஜேபி முன்னணி தலைவர்கள் யாரும் பெரியார் குறித்து தவறான கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பெரியாரைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் பாண்டிச்சேரியில் பட்டம் வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதை வன்மை கண்டிக்கிறோம் எனவும் அதே போல் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஆணித்தரமாக அதனை எதிர்த்து குரல் கொடுக்க அதிமுக தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஒரு மதசார்பற்ற ஆட்சி என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.