விருதுநகரில் நமது ஊர் நமது கடமை என்ற அமைப்பிலிருந்து 25 பள்ளிகளைச் சேர்ந்த நான்காயிரத்து 360 மாணவ மாணவிகள் கலந்துகொண்ட குப்பைகளைத் தரம் பிரிப்பது எப்படி என்ற மாபெரும் விழிப்புணர்வு வகுப்பு ஒரு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.
இச்சாதனை, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பிலிருந்து அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு முன் 4000 பேர் கலந்துகொண்டது மட்டுமே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதற்கான சான்றிதழை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஹரிஷ், நமது ஊர் நமது கடமை அமைப்பினர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் 4360 பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.