ETV Bharat / state

ராஜபாளையம் அருகே விவசாயி வெட்டிக்கொலை - விருதுநகர் மாவட்டச் செய்திகள்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே விவசாயி ஒருவர் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rajapalayam
rajapalayam
author img

By

Published : Jan 29, 2020, 7:37 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). முன்னாள் ஊர் நாட்டாமையான இவர், நேற்று மாலை தேசிகாபுரத்திலிருந்து முறம்புப் பகுதிக்கு தேநீர் குடிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர், இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, தேசிகாபுரம் சாலையில் கும்பலாக வந்த சிலர் வழிமறித்து கீழேத் தள்ளி சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதையடுத்து தகவலறிந்து காவல் துறையினர் அங்கு விரைந்து உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). முன்னாள் ஊர் நாட்டாமையான இவர், நேற்று மாலை தேசிகாபுரத்திலிருந்து முறம்புப் பகுதிக்கு தேநீர் குடிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர், இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, தேசிகாபுரம் சாலையில் கும்பலாக வந்த சிலர் வழிமறித்து கீழேத் தள்ளி சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதையடுத்து தகவலறிந்து காவல் துறையினர் அங்கு விரைந்து உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் உயிரிழப்பு

Intro:விருதுநகர்
29-01-2020

விவசாயி சரமாரியாக வெட்டிக் கொலை

Tn_vnr_03_murder_photo_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரத்தைச் சோந்த விவசாயி தங்கவேல் (55). முன்னாள் ஊா் நாட்டாண்மையான இவருக்கு, தேசிகாபுரம் மற்றும் சோழபுரத்தில் விவசாய நிலம் உள்ளது. வீட்டிலிருந்து முறம்பு பகுதிக்கு தேநீா் குடிக்கச் சென்ற இவா், தனது இரு சக்கர வாகனத்தில் குடிநீா் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். இரவு 7.30 மணியளவில் தேசிகாபுரத்துக்கு செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த அவரை, மா்ம நபா்கள் வழிமறித்துள்ளனா். பின்னா், இரு சக்கர வாகனத்திலிருந்து அவரை தள்ளிவிட்டுள்ளனா். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த தங்கவேலை, மா்மக் கும்பல் கழுத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் தங்கவேல் சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.