சாத்தூர் அருகே அன்பின் நகரத்தில் உள்ள மணிராஜ் என்பவருக்கு சொந்தமான முத்துராக் பட்டாசு தொழிற்சாலையிலிருந்து பட்டாசு பண்டல்கள் ஏற்றிய லாரி, சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தது. கன்னியாகுமரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் போக்குவரத்து பணிமனை அருகே செல்லும் போது, சாலையை கடக்க முயன்ற படந்தால் கிராமத்தை சேர்ந்த பிச்சை (60) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டுநரின் கட்டுபாட்டையிழந்த லாரி, சர்வீஸ் சாலையில் தலைகீழே கவிழ்ந்தது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், முதியவர் உடலை கூராய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் சுமார் ஒருமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி கவிழ்ந்ததில் கீழச்செல்லையா புரத்தை சேர்ந்த ஓட்டுநர் சீனி (38), ஏழுமிச்சங்காய்பட்டியை சேர்ந்த கிளீனர் முனியசாமி (40) ஆகிய இருவரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாத்தூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வன்முறையில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளர்: நடவடிக்கை எடுக்காத காவல்துறை!