விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதோஷம், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை (ஜன.26) ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி வரை 4 நாள்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க முடியும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மார்கழி பெளவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!