ETV Bharat / state

சதுரகிரி கோயிலுக்குச் சென்ற இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!

author img

By

Published : Oct 29, 2020, 10:16 AM IST

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

virudhunagr Sathuragiri temple
virudhunagr Sathuragiri temple

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 700 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 28) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்து திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் கோட்டை தலைவாசல் அருகே மதுரையைச் சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 700 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (அக்டோபர் 28) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் இருந்து திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் கோட்டை தலைவாசல் அருகே மதுரையைச் சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பலத்த மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.