ETV Bharat / state

திருச்சுழி திமுக ஊராட்சித்தலைவர் வீட்டில் ரூ.3,07,500 பறிமுதல்!

author img

By

Published : Apr 4, 2021, 2:46 PM IST

விருதுநகர்: திருச்சுழி அருகே திமுக ஊராட்சித் தலைவர் வீட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 3,07,500 பறிமுதல்.

பணம் பறிமுதல்
திருச்சுழி திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.3,07,500 பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள துலுக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் (45). திமுக பிரமுகரான இவர் கம்பாளி கிராமத்தில் வசித்து வருகிறார்.

அப்பகுதியில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் வீட்டில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர், ஓட்டுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த ரூ.3,07,500 பணத்தினை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பணத்தை திருச்சுழி வட்டாச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த பணம் குறித்து வாசுதேவனிடம் அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள துலுக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் (45). திமுக பிரமுகரான இவர் கம்பாளி கிராமத்தில் வசித்து வருகிறார்.

அப்பகுதியில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் வீட்டில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர், ஓட்டுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த ரூ.3,07,500 பணத்தினை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பணத்தை திருச்சுழி வட்டாச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சிவக்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த பணம் குறித்து வாசுதேவனிடம் அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.