ETV Bharat / state

விக்கிரவாண்டி தொகுதியில் 28 பேர் வேட்புமனு தாக்கல்; 15 பேரின் மனுக்கள் ஏற்பு!

author img

By

Published : Oct 2, 2019, 9:37 AM IST

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 28 மனுக்களில் 15 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் 28 பேர் மனுதாக்கல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதிவரை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி

இதில் விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என 28 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்

இதில், திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவரும் இயக்குநருமான கௌதமன் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தமிழ் பேரரசு கட்சி வேட்பாளர் இயக்குனர் கௌதமன்
தமிழ் பேரரசு கட்சி வேட்பாளர் இயக்குநர் கௌதமன்

இது குறித்து, செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், "விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 28 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டு மீதமுள்ள 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், வருகின்ற மூன்றாம் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிறகு சின்னங்கள் ஒதுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க : வேட்புமனு தாக்கல் செய்ய குதிரையில் வந்த வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதிவரை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி

இதில் விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என 28 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்

இதில், திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவரும் இயக்குநருமான கௌதமன் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தமிழ் பேரரசு கட்சி வேட்பாளர் இயக்குனர் கௌதமன்
தமிழ் பேரரசு கட்சி வேட்பாளர் இயக்குநர் கௌதமன்

இது குறித்து, செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், "விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 28 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டு மீதமுள்ள 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், வருகின்ற மூன்றாம் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிறகு சின்னங்கள் ஒதுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க : வேட்புமனு தாக்கல் செய்ய குதிரையில் வந்த வேட்பாளர்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 28 மனுக்களில், 15 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் காலியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ம் தேதி முதல் தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்று வந்தது.

இதில் விக்ரவண்டி தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 28 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. 

இதில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கௌதமன் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மீதமிருந்த 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர்.,

"விக்ரவாண்டி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 23 நபர்கள், 28 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மீதமிருந்த 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வருகிற மூன்றாம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பிறகு சின்னங்கள் ஒதுக்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.