ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்! - ulunthurpettai kumarakuru mla house muttrugai

விழுப்புரம்: 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் கிராமங்களை விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இல்லத்தை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-kumarakuru-mla-house-muttrugai
-kumarakuru-mla-house-muttrugai
author img

By

Published : Dec 16, 2019, 3:25 PM IST

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆமூர், கொளத்தூர், துளக்கம் பட்டு,குப்பம் ஆகிய கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேறாததைத் தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்லத்தை முற்றுகையிட அப்பகுதி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜியகுமார், வட்டாட்சியர் காதர் அலி, ஆய்வாளர் எழிலரசி ஆகியோரின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றனர். இதை அருகில் இருந்த காவல் துறையினர் தடுத்து விஷத்தை கைப்பற்றினார்கள்.

சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு, ’ தாங்கள் ஏற்கெனவே இந்த கோரிக்கையை அரசிடம் சொல்லாததால் தற்போது நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இணைய வேண்டிய சூழல் உள்ளது’ என கூறினார். இதனால் பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ’சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் சொல்கின்ற கோரிக்கையை நான் அரசிற்கு தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.

அதன் பின்னர், பொதுமக்கள் எங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் வரைத் தொடர்ந்து பல கட்டப் போராட்டத்தை தொடருவோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின் கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க:தனியார் விடுதியில் தங்கி எல்இடி டிவியைத் திருடிச் சென்ற நபர் - காவல்துறையினர் விசாரணை!

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆமூர், கொளத்தூர், துளக்கம் பட்டு,குப்பம் ஆகிய கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேறாததைத் தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்லத்தை முற்றுகையிட அப்பகுதி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜியகுமார், வட்டாட்சியர் காதர் அலி, ஆய்வாளர் எழிலரசி ஆகியோரின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றனர். இதை அருகில் இருந்த காவல் துறையினர் தடுத்து விஷத்தை கைப்பற்றினார்கள்.

சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு, ’ தாங்கள் ஏற்கெனவே இந்த கோரிக்கையை அரசிடம் சொல்லாததால் தற்போது நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இணைய வேண்டிய சூழல் உள்ளது’ என கூறினார். இதனால் பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ’சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் சொல்கின்ற கோரிக்கையை நான் அரசிற்கு தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.

அதன் பின்னர், பொதுமக்கள் எங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் வரைத் தொடர்ந்து பல கட்டப் போராட்டத்தை தொடருவோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின் கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க:தனியார் விடுதியில் தங்கி எல்இடி டிவியைத் திருடிச் சென்ற நபர் - காவல்துறையினர் விசாரணை!

Intro:tn_vpm_01_ulunthurpettai_kumarakuru_mla_house_muttrugai_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ulunthurpettai_kumarakuru_mla_house_muttrugai_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆமூர், கொளத்தூர்,துளக்கம்பட்டு,குப்பம் ஆகிய கிராமங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக் கோரி 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு இல்லத்தை நோக்கி முற்றுகையிட சென்றதால் பரபரப்பு !!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரிலுள்ள உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் குமரகுரு இல்லத்தை தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆமூர், கொளத்தூர், துளக்கம் பட்டு,குப்பம் ஆகிய கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்ததை எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் இடமும் பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாததை தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இல்லத்தை முற்றுகையிட கிராமபொதுமக்கள் ஊர்வலமாக வந்த போது உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜியகுமார், வட்டாட்சியர் காதர் அலி, ஆய்வாளர் எழில்ரசி ஆகியோரின் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது சிலர் கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றனர் இதை அருகில் இருந்த காவல்துறையினர் தடுத்து விஷயத்தை கைப்பற்றினார்கள் இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது இதை அறிந்த வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு சுமூக தீர்வு எட்டாததால்
பிறகு சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் இல்லத்திற்கு வர வைத்தபேது


சட்டமன்ற உறுப்பினர் இல்லத்திற்கு செல்லுகின்ற வழியில் போலீசார் பொதுமக்களை வழிமறித்து முக்கியமான நான்கு பேரை மட்டும் வரச் சொன்னதாக தகவல் சொல்வதன் அதன்அடிப்படையில் மக்கள் தாங்கள் அனைவரும் தான் சட்டமன்ற உறுப்பினரை சந்திப்போம் எனக்கூறி சென்றபோது பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் தாங்கள் ஏற்கனவே இந்த கோரிக்கையை அரசிடம் சொல்லாததால் தற்போது நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இணைய வேண்டிய சூழல் உள்ளது என கூறியபோது பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது பிறகு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் சொல்கின்ற கோரிக்கையை நான் அரசிற்கு தெரிவிக்கிறேன் அனைவரும் சென்று வாருங்கள் என சொன்னதால் பொதுமக்கள் தாங்கள் எங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்தை இணைக்கும் வரை தொடர்ந்து பலகட்ட போராட்டத்தை தொடருவோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.