ETV Bharat / state

விழுப்புரத்தில் சுங்கச்சாவடி வசூல் ஆரம்பம்: பொதுமக்கள் அதிருப்தி - விழுப்புரம் மாவட்ட செய்திகள்

விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்றுமுதல் மீண்டும் கட்டண வசூல் தொடங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் சுங்கச்சாவடி வசூல் ஆரம்பம்! பொதுமக்கள் அதிருப்தி
விழுப்புரத்தில் சுங்கச்சாவடி வசூல் ஆரம்பம்! பொதுமக்கள் அதிருப்தி
author img

By

Published : Apr 20, 2020, 12:39 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அதேசமயம், ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சுங்கச்சாவடிகள் வழக்கம்போல் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து இன்றுமுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

விழுப்புரத்தில் சுங்கச்சாவடி வசூல் ஆரம்பம்!

அந்த வகையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகன உரிமையாளர்களிடம் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. ஊரடங்கு உத்தரவு முழுவதும் தளர்த்தப்படாத நிலையில் இந்த சுங்கக் கட்டண வசூல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கூடுதல் கட்டணம் வசூலிப்பு: அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அதேசமயம், ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சுங்கச்சாவடிகள் வழக்கம்போல் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து இன்றுமுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

விழுப்புரத்தில் சுங்கச்சாவடி வசூல் ஆரம்பம்!

அந்த வகையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகன உரிமையாளர்களிடம் இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. ஊரடங்கு உத்தரவு முழுவதும் தளர்த்தப்படாத நிலையில் இந்த சுங்கக் கட்டண வசூல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கூடுதல் கட்டணம் வசூலிப்பு: அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.