ETV Bharat / state

'சிஏஏவுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் கரம்கோர்க்க வேண்டும்' - திருமாவளவன்

author img

By

Published : Jan 31, 2020, 7:50 AM IST

விழுப்புரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் ஜனநாயக சக்திகள் கரம்கோர்த்து அதனை எதிர்க்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தொல் திருமாவளவன் செய்திகள்  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம்  thiruma invite all democratic movements  தேசம் காப்போம் மாநாடு
திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கள்ளக்குறிச்சி வந்திருந்தார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே, எழுந்த பல குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடந்துவருகின்றன. தற்போது மீண்டும் அதேபோன்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முழுமையாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிந்து, இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஆணயம் ஒன்றை அமைக்க வேண்டும்.

திருமாவளவன் பேட்டி

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி தேசம் காப்போம் மாநாடு மற்றும் பேரணி நடைபெறவுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப்பெறும் வரையில், அதனை எதிர்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கள்ளக்குறிச்சி வந்திருந்தார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே, எழுந்த பல குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடந்துவருகின்றன. தற்போது மீண்டும் அதேபோன்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முழுமையாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிந்து, இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஆணயம் ஒன்றை அமைக்க வேண்டும்.

திருமாவளவன் பேட்டி

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி தேசம் காப்போம் மாநாடு மற்றும் பேரணி நடைபெறவுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப்பெறும் வரையில், அதனை எதிர்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

Intro:tn_vpm_03_kallakurichi_thirumavalavan_byte_tn10026Body:tn_vpm_03_kallakurichi_thirumavalavan_byte_tn10026Conclusion:கள்ளக்குறிச்சி விசிக, கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இராமமூர்த்தி . இல்ல நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து பின் செய்தியாளர் சந்திப்பில் :



தமிழ்நாடு பொது தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன, ஏற்கனவே பலமுறை குற்றச்சாட்டுகளிலிருந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.இப்போது மீண்டும் அதே போன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .தமிழக அரசின் முழு பொறுப்பேற்க வேண்டும்,இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பற்றி விசாரிக்க முழுமையாக விசாரித்து இனி அப்படி ஒரு குற்றச்சாட்டு ஏதாவது அளவிற்கு உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தடுக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

ஆங்காங்கே மனித சங்கிலி போராட்டங்களின் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுக்கிறேன். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மக்கள் மீது திணிக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளி வருகின்ற பிப்.22-ம் தேதி தேசம் காப்போம் பேரணி மாநாடு நடைபெறுகிறது. குடியுருமை சட்டம் ஒட்டுமொத்தமாக தேசத்திற்கு எதிரான இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் NPR, NRC,என்ற சட்டத்தை மோடி அரசு , திரும்பப்பெறும் வரையில், இத்திட்டத்தை பின் வாங்கும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் கைகோர்த்து நிற்க்க வேண்டும். இதற்க்காக அனைத்து ஜனநாயக சக்திகளும் கைகோர்த்து நின்று அனைத்து போராடங்களுக்கும் போராட முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார். உடன் மாவட்ட செயலாளர் தனபால், அனைத்துஆசிரியர் கூட்டமைப்பு மாநில நிர்வாகி முனைவர் ஞான திலகர், மாநில நிர்வாகிகள் பாசறை பாலு, கூத்தக்குடி பாலு, வழக்கறிஞர் பரசுராமன் மாவட்ட நிர்வாகி சுதாகர் உள்ளார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.