ETV Bharat / state

தொடர் மணல் திருட்டு - மூன்று பேர் கைது! - திருக்கோவிலூரில் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்று பேர் கைது

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மணல் திருடியர்கள்
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மணல் திருடியர்கள்
author img

By

Published : Jan 21, 2020, 10:27 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷின் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் பகுதியில் இரண்டு லாரிகளில், ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருடுவதாகவும், அதேபோல கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாகவும் திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர், அவரது தலைமையிலான காவல் துறையினர், மண்டபம் பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரிகளை சுற்றிவளைத்தனர். ஆனால், காவல் துறையினர் வருகையை அறிந்து திருட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்பு, அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு லாரிகள், மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுப்பிரமணி(40), தெய்வீகன் (54), கல்வராயன்(55) ஆகியோரை திருக்கோவிலூர் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மணல் திருடியர்கள்

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷின் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் பகுதியில் இரண்டு லாரிகளில், ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருடுவதாகவும், அதேபோல கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாகவும் திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர், அவரது தலைமையிலான காவல் துறையினர், மண்டபம் பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரிகளை சுற்றிவளைத்தனர். ஆனால், காவல் துறையினர் வருகையை அறிந்து திருட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்பு, அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு லாரிகள், மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுப்பிரமணி(40), தெய்வீகன் (54), கல்வராயன்(55) ஆகியோரை திருக்கோவிலூர் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மணல் திருடியர்கள்

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்..!

Intro:tn_vpm_02_thirukovilur_two_lorry_jcb_sezied_vis_tn10026Body:tn_vpm_02_thirukovilur_two_lorry_jcb_sezied_vis_tn10026Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இன்று ஒரே நாளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகள், 2 லாரி, ஒரு ஜேசிபி பறிமுதல் 3 பேர் கைது !

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் வந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் அவர்களின் மேற்பார்வையில் தீவர சோதனையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் பகுதியில் 2 லாரிகளில் ஜேசிபி இயந்திரம் மூலமாக கள்ளத்தனமாக உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றுவதாகவும் அதே போல கரடி பகுதியில் 3 மாட்டு வண்டிகள் உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வருவதாக  திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணபாலனுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் அவரது தலைமையிலான போலிசார் மண்டபம் பகுதியில் மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகள், மற்றும் மணல் அள்ள பயன் படுத்திய ஜேசிபி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கரடி பகுதியில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கரடி பகுதியை சேர்ந்த, வீரன் மகன் சுப்பிரமணி(40), கோதண்டபானி மகன் தெய்வீகன் (54) மற்றும் கேசவன் மகன் கல்வராயன்(55) ஆகியோரை திருக்கோவிலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி ஆகியவற்றின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனருமான தப்பி ஓடிய வெண்ணிலவனை திருக்கோவிலூர் போலிசார் தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.