ETV Bharat / state

விழுப்புரத்தில் 'தீண்டாமை' விவகாரம்.. மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

author img

By

Published : Jun 7, 2023, 11:04 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலை அடுத்து, கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இருதரப்பினரிடையே மோதல் - மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு
இருதரப்பினரிடையே மோதல் - மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூர் அருகே இருக்கும் மேல்பாதி என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஊரின் காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், திரெளபதி அம்மன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அதே பகுதியில் வசித்து வரும் வேறு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

அந்த நேரத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. எனவே, இந்த இருதரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதனால் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலைப் பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திரெளபதி அம்மன் கோயிலை இன்று (ஜூன் 7) காலை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

இதனால் மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், வடக்கு மண்டல காவல் துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட கோயில் வாசலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கடந்த மே 26ஆம் தேதி வேறு சமூகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோயிலின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்.. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.. கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் கோலியனூர் அருகே இருக்கும் மேல்பாதி என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஊரின் காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், திரெளபதி அம்மன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அதே பகுதியில் வசித்து வரும் வேறு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

அந்த நேரத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. எனவே, இந்த இருதரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதனால் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலைப் பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திரெளபதி அம்மன் கோயிலை இன்று (ஜூன் 7) காலை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

இதனால் மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், வடக்கு மண்டல காவல் துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட கோயில் வாசலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கடந்த மே 26ஆம் தேதி வேறு சமூகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கோயிலின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்.. பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு.. கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.