ETV Bharat / state

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகள் பறிமுதல்; தனிப்படை போலீஸ் அதிரடி - seized in Tirukovilur

விழுப்புரம்: திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மணல் கடத்திச் சென்ற மூன்று லாரிகளை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் லாரிகள்
author img

By

Published : Aug 26, 2019, 9:47 AM IST

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மணல் கொள்ளையைத் தடுக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் நேற்றிரவு திருகோவிலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் லாரிகள்

அப்போது அந்த வழியே வந்த மூன்று லாரிகளை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. லாரிகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலைக்கு தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மணல் கொள்ளையைத் தடுக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் நேற்றிரவு திருகோவிலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் லாரிகள்

அப்போது அந்த வழியே வந்த மூன்று லாரிகளை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. லாரிகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:tn_vpm_02_thirukkovilur_sand_theft_lorry_arrest_vis_tn10026Body:tn_vpm_02_thirukkovilur_sand_theft_lorry_arrest_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தொடர்ந்து மணல் கொல்லையில் ஈடுபட்ட வந்த 3 லாரிகள் பறிமுதல் ஓட்டுநர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வழியாக கரூரில் இருந்து தொடர்ந்து லாரிகளில் மணல் கொள்ளை நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைக்கு கரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு லாரிகளில் திருக்கோவிலூர் வழியாக உரிய அனுமதி இன்றி மணல் கொள்ளை நடைபெறுவதாக இரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து திருக்கோவிலூர் புறவழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தனிப்படை போலிசார், அவ்வழியாக வந்த மூன்று லாரிகளை சோதனை செய்ததில் மூன்றிலும் உரிய அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்து உள்ளது. இதனை அடுத்து மூன்று வாகனத்தையும் பறிமுதல் செய்த போலிசார் அதனை ஓட்டி வந்த ஆறுமுகம்(32), ரங்கசாமி, ராஜா(32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.