ETV Bharat / state

பாமக பிரமுகர் குத்திக் கொலை: கொலையாளிகளை தேடும் போலீஸ் - pmk candidate murdered on road at villupuram

விழுப்புரம்: சாலையில் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த பாமக பிரமுகரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக பிரமுகர் வெட்டிக் கொலை
பாமக பிரமுகர் வெட்டிக் கொலை
author img

By

Published : Jan 30, 2021, 9:22 PM IST

விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. கொத்தனார் வேலை செய்து வரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தச் சூழலில் இன்று (ஜன. 30) அவர் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்துபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ரவியை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து ரவியை மருத்துமனையில் அனுமதிக்கச் சென்றனர். அப்போது ரவி வழியிலேயே உயிரிழந்துள்ளார். பட்டப் பகலிலேயே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... நாட்றம்பள்ளியில் கணித ஆசிரியர் மீது கார் ஏற்றி கொலை: போலீஸ் விசாரணை!

விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. கொத்தனார் வேலை செய்து வரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தச் சூழலில் இன்று (ஜன. 30) அவர் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்துபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ரவியை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து ரவியை மருத்துமனையில் அனுமதிக்கச் சென்றனர். அப்போது ரவி வழியிலேயே உயிரிழந்துள்ளார். பட்டப் பகலிலேயே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க... நாட்றம்பள்ளியில் கணித ஆசிரியர் மீது கார் ஏற்றி கொலை: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.