ETV Bharat / state

'கொடுத்ததும் நீங்கதான்... பறிக்க நினைப்பதும் நீங்கதான்' - கிராம மக்கள் வேதனை

author img

By

Published : Jan 28, 2020, 10:33 AM IST

விழுப்புரம்: சத்தியமங்கலம் அருகே நீர்பிடிப்புப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் தங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சத்தியமங்கலம் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சத்தியமங்கலம் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் கிராம நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 'நீராதாரத்தைப் பெருக்குவோம்' என்ற பெயரில் அந்தப் பகுதியில் உள்ள 180 குடும்பங்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்டு பதறிப்போன இவர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

சத்தியமங்கலம் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கமே, தற்போது எங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள 200 குடும்பங்களும் நீர் ஆதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில்தான் வாழ்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த நோட்டீசுக்கான காரணம் என்ன என்று புரியவில்லை.

எங்கள் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம், எங்களின் உழைப்பு இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நல்லதொரு முடிவை ஆட்சியர் எடுக்க வேண்டும்; மாற்று முடிவை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய குடும்ப அட்டை முதல், அரசின் அனைத்து அடையாள அட்டைகளையும் நாங்கள் அரசிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றனர்.


இதையும் படிங்க:

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் கிராம நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 'நீராதாரத்தைப் பெருக்குவோம்' என்ற பெயரில் அந்தப் பகுதியில் உள்ள 180 குடும்பங்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்டு பதறிப்போன இவர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

சத்தியமங்கலம் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கமே, தற்போது எங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள 200 குடும்பங்களும் நீர் ஆதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில்தான் வாழ்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த நோட்டீசுக்கான காரணம் என்ன என்று புரியவில்லை.

எங்கள் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம், எங்களின் உழைப்பு இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நல்லதொரு முடிவை ஆட்சியர் எடுக்க வேண்டும்; மாற்று முடிவை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய குடும்ப அட்டை முதல், அரசின் அனைத்து அடையாள அட்டைகளையும் நாங்கள் அரசிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றனர்.


இதையும் படிங்க:

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

Intro:விழுப்புரம்: செஞ்சி அருகேயுள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.


Body:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சத்தியமங்கலம் கிராமம். இங்குள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்களுக்கு அரசு சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'நீராதாரத்தை பெருக்குவோம்' என்ற பெயரில் அந்தப் பகுதியில் உள்ள 180 குடும்பங்களுக்கும் அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைகண்டு பதறிப்போன இவர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது., எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கமே, தற்போது எங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

இங்குள்ள 200 குடும்பங்களும் நீர் ஆதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் தான் வாழ்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த நோட்டீசுக்கு வந்த அவசியம் என்ன?

அப்படி இதுதான் நடக்கும் என்றால் எங்களுடைய குடும்ப அட்டை முதல், அரசின் அனைத்து அடையாள அட்டைகளையும் நாங்கள் அரசிடமே திரும்பப் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.




Conclusion:எனவே எங்கள் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம், எங்களின் உழைப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு நல்லதொரு முடிவை அரசிடம் பேசி ஏழை மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.