ETV Bharat / state

வாக்களித்தும் என்ன பயன்... பிரதிநிதித்துவம் இல்லையே!

author img

By

Published : Oct 6, 2021, 10:44 AM IST

Updated : Oct 6, 2021, 10:57 AM IST

விழுப்புரம்: செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்ததால் வாக்குச்சாவடியில் வாக்காளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

elections
elections

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைந்து உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு உள்ளாட்சித் தேர்தல் ஏலம் முறையில் நடைபெற்றது.

தனி ஊராட்சியாக மாற்ற கோரிக்கை

பொண்ணங்குப்பம் ஊராட்சியில் ஆயிரத்து 400 வாக்குகள் உள்ளன. துத்திப்பட்டு கிராமத்தில் இரண்டாயிரத்து 400 வாக்குகள் உள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளைத் தொடர்ந்து துத்திப்பட்டு பகுதி மக்களே தலைவர், கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுத்துவருகின்றனர்.

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

இதனால் பொண்ணங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களால் எவ்வித ஜனநாயக பதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொன்னங்குப்பம் பகுதியைத் தனி ஊராட்சியாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்துவந்துள்ளனர். மனு மீதான உரிய நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்பு

இதனால் அப்பகுதியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதனால் தேர்தல் புறக்கணிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு தங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று (அக். 6) வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20 லட்சம் ரூபாய்க்கும், தலைவர் பதவிக்கு 13 லட்சம் ரூபாய்க்கும் ஏற்கனவே ஏலம்விடப்பட்ட நிலையில், இன்று பெயரளவிலேயே தேர்தல் நடத்தப்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ. 13 லட்சத்து ஏலம் விட்ட கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைந்து உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு உள்ளாட்சித் தேர்தல் ஏலம் முறையில் நடைபெற்றது.

தனி ஊராட்சியாக மாற்ற கோரிக்கை

பொண்ணங்குப்பம் ஊராட்சியில் ஆயிரத்து 400 வாக்குகள் உள்ளன. துத்திப்பட்டு கிராமத்தில் இரண்டாயிரத்து 400 வாக்குகள் உள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் உள்ளாட்சித் தேர்தலில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளைத் தொடர்ந்து துத்திப்பட்டு பகுதி மக்களே தலைவர், கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுத்துவருகின்றனர்.

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

இதனால் பொண்ணங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களால் எவ்வித ஜனநாயக பதவிகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொன்னங்குப்பம் பகுதியைத் தனி ஊராட்சியாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்துவந்துள்ளனர். மனு மீதான உரிய நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்பு

இதனால் அப்பகுதியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதனால் தேர்தல் புறக்கணிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு தங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று (அக். 6) வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20 லட்சம் ரூபாய்க்கும், தலைவர் பதவிக்கு 13 லட்சம் ரூபாய்க்கும் ஏற்கனவே ஏலம்விடப்பட்ட நிலையில், இன்று பெயரளவிலேயே தேர்தல் நடத்தப்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ. 13 லட்சத்து ஏலம் விட்ட கிராம மக்கள்

Last Updated : Oct 6, 2021, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.