ETV Bharat / state

முன்விரோதம்  காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல்

author img

By

Published : Dec 27, 2020, 3:57 PM IST

விழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

murder-attempt-in-vilupuram
murder-attempt-in-vilupuram

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பெரம்பை வாழபட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பிரகாஷ் (24). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பிரகாஷை வீட்டிலிருந்து வெளியே வரச் சொல்லி அழைத்துள்ளனர். ஆனால், பிரகாஷ் வெளியே வர மறுத்துள்ளார்.

தொடர்ந்து, அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில் பிரகாஷை கடத்திச் சென்று, புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் அரிவாளால் தலை, கைகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பிரகாஷை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கோட்டக்குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தங்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக, புதுச்சேரியைச் சேர்ந்த ராஜசேகர், ஜீவா, காண்டிபன் ஆகியோர் பிரகாஷை கொலை செய்யத் திட்டமிட்டு கடத்தியது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மீதமுள்ள மூன்று பேர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டெம்போ டிரைவர் போச்சோவில் கைது!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பெரம்பை வாழபட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பிரகாஷ் (24). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பிரகாஷை வீட்டிலிருந்து வெளியே வரச் சொல்லி அழைத்துள்ளனர். ஆனால், பிரகாஷ் வெளியே வர மறுத்துள்ளார்.

தொடர்ந்து, அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில் பிரகாஷை கடத்திச் சென்று, புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் அரிவாளால் தலை, கைகளில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பிரகாஷை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கோட்டக்குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தங்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக, புதுச்சேரியைச் சேர்ந்த ராஜசேகர், ஜீவா, காண்டிபன் ஆகியோர் பிரகாஷை கொலை செய்யத் திட்டமிட்டு கடத்தியது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மீதமுள்ள மூன்று பேர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த டெம்போ டிரைவர் போச்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.