ETV Bharat / state

திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் எம்.பி. ரவிக்குமார் ஆய்வு

author img

By

Published : Jan 10, 2020, 9:57 PM IST

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் எம்.பி. ரவிக்குமார் திடீரென ஆய்வு செய்து, அக்கல்லூரி முதல்வரிடம் கல்லூரியின் குறைகளை கேட்டறிந்தார்.

Villupuram
Villupuram

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாலுகாவில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரிக்கு இன்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் கல்லூரியில் நிலவும் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கல்லூரியில் உள்ள நன்மை, குறைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கோரிக்கையான கழிவறை, பேருந்து நிறுத்த நிழற்குடை, வகுப்பறைகளுக்கு தேவையான மேசை, கணினிகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்துதருமாறு கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.

விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தீடிர் ஆய்வு

மேலும் பேராசிரியர்களுக்கு தேவையான மேசை, நாற்காலிகள் கல்லூரிக்கு கூடுதல் கட்டடம் மதில்சுவர் கட்டுவதற்கும் மிக விரைவில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தாலுகாவில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரிக்கு இன்று விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் கல்லூரியில் நிலவும் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கல்லூரியில் உள்ள நன்மை, குறைகளை அவர் கேட்டறிந்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கோரிக்கையான கழிவறை, பேருந்து நிறுத்த நிழற்குடை, வகுப்பறைகளுக்கு தேவையான மேசை, கணினிகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்துதருமாறு கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.

விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தீடிர் ஆய்வு

மேலும் பேராசிரியர்களுக்கு தேவையான மேசை, நாற்காலிகள் கல்லூரிக்கு கூடுதல் கட்டடம் மதில்சுவர் கட்டுவதற்கும் மிக விரைவில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

Intro:tn_vpm_03_ulunthuerpettai_mp_visiting_college_vis_tn10026.mp4Body:tn_vpm_03_ulunthuerpettai_mp_visiting_college_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டை அடுத்து திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் எம்.பி ரவிக்குமார் திடீர் ஆய்வு !!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகாவில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரிக்கு இன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. இரவிக்குமார் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி முதல்வர்யிடம் நிலையை குறித்தும் குறைகளையும் கேட்டறிந்தார், அதனைத் தொடர்ந்து கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களிடமும் அவர்களுக்கான குறைகளை கேட்டறிந்தார் இறுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கல்லூரியில் உள்ள நன்மை குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது மாணவ, மாணவிகளின் கோரிக்கையான கழிப்பறை, பேருந்து நிறுத்த நிழற்குடை, வகுப்பறைகளுக்கு தேவையான பென்ச் மேசை மற்றும் கணினிகள் போன்ற குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர், அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரை. இரவிக்குமார் அவர்கள் உடனடியாக கழிப்பறை கட்டுவதற்க்கும் பேருந்து நிழற்குடை அமைப்பதும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

அதேபோன்று மேஜை நாற்காலிகள் பேராசிரியர்களுக்கு தேவையான மேஜை நாற்காலிகள் கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் மதில்சுவர் கட்டுவதற்கும் மிக விரைவில் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறியதால் , அதேபோன்று பேராசிரியர்களின் குறைகளை உடனடியாக அரசு கவனத்திற்கு கொண்டு சென்று கட்டாயம் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி கோலப் போட்டியில் கலந்துகொண்ட வாக்கு செலுத்துவதை குறித்து விழிப்புணர்வு கோலங்கள் போட்டு இருந்தனர். அந்த மாணவிகளிடம் அதுபற்றி விளக்கம் கேட்டு அவரும் சில விளக்கங்களைக் கொடுத்து மாணவிகளிடம் கலந்துரையாடல் செய்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.